
நீங்கள் இந்த பயிற்சிகளை செய்து கொண்டும் இருக்கும் போது உங்களுக்கு உள்ளே இனம் தெரியாத ஒரு ஞானம் ஆனது ஏற்பட ஆரம்பிக்கும். காரணம் இந்த பயிற்சிகள் அனைத்துமே மனிதர்களுக்கு எளிமையான வழிகளில் நான் விவரித்து இருக்கின்றேன். அனைத்து மனிதர்களும் ஞானத்தை அடைவதற்கு தகுதி வாய்ந்தவர்களாக தான் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இடையில் இந்த மதங்களும் கோட்டபாடுகளும், மத தலைவர்களும், மதத்தை ஏற்படுத்தியவர்களும் கொடுக்கின்ற சித்தாந்தங்கள் ஆனது அவர்களின் வாழ்க்கையில் பலவிதமான குழப்பங்களை கொடுத்து அவர்களின் வாழ்க்கையினை திசை திருப்பிவிடுகின்றன. காரணம் மனிதன் எப்போதுமே தனக்கென்று ஒருபாதயை தேர்ந்தேடுத்து கொள்வதற்கு இந்த மதங்கள் எப்போதுமே தடைக்கல்லாகவே இருக்கின்றன. அதனால் அவனால் தன்னுடைய பாதையை தானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கான விழிப்புணர்ச்சி இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் தான் மனிதன், ஞானம் அடைவது ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்து கொள்கிறான் உண்மையில் ஞானம் என்பது அடைய முடியாத ஒன்று அல்ல. உண்மையில் சொல்ல போனால் ஞானம் என்பது அடைய கூடியது அல்ல, அது தெரிந்து கொள்வது. அந்த தெரிந்து கொள்வதற்கு தான் அவனிடம் முயற்சிகள் இல்லாமலேயே செய்து விட்டன இந்த மதங்கள். குறிப்பாக மேற்கத்திய மதங்கள். இவைகள் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக, மனித குலத்திற்கு செய்து வந்த ஒரே வேலை இதுதான். ஏன் என்றால் அவர்கள் தங்களுடைய மதம், மற்றும் மத கோட்டபாடுகள் மட்டும் தான் நேரடியாக கடவுளால் கொடுக்கப்பட்டது என்கின்ற சித்தாந்தம். உண்மையில் மேற்கத்திய மதங்கள் நிச்சயமாக கடவுளால் கொடுக்க பட்டது அல்ல. ஆனால் அதனை அவர்களின் அறிவானது ஏற்று கொள்ள முடியாத படி அதனை பின்பற்றுபவர்கள் ஆணித்தரமாக மக்களின் மனதில் வி
Page Count:
368
Publication Date:
2019-10-05
Publisher:
Amazon Digital Services LLC - Kdp
ISBN-10:
1696914469
ISBN-13:
9781696914468
No comments yet. Be the first to share your thoughts!